எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

வியாழன், 29 ஜனவரி, 2009

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு...முத்துக்குமார்


தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம்.
வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
*ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கப் போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர், மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்களும், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.
உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர்பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குங்கள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆள்பலம், பணபலம், அதிகார வெறியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.
எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியவர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமிழீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட. காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள். உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்களா? எல்லை தாண்டிப் போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றால், வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருக்கும் எங்கள் சகோதரர்கள், இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆகக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை வற்புறுத்துங்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகும் உங்களுடைய அந்த நடவடிக்கை, எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.
டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா...
இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி, தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுப்பூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான், கைவிடப்பட்ட நிலைமைக் காலங்கள்தான் சிறந்த மக்கள் தலைவனைக் கண்டுபிடித்திருக்கின்றன. தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?
இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால், நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளுவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உண்மையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை, அதில் தலையிட முடியாது என்றது. பிறகு சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியது, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக் கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்தியா மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப் போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும், புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச் செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, - அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?
அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?
அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிடச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
- எனது பதினான்கு அம்சக் கோரிக்கைகள்-
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடத்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசால் எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எவ்வித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குட்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுமே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழின மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வன்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டனைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

திங்கள், 19 ஜனவரி, 2009

வீரியரின் பூமியாக இது விளங்கட்டும்...!




சிறிலங்கா என்றால் இப்போது உலகால் எவ்வாறு பொருள் கொள்ளப்படும்? அண்மையில் வோசிங்டனிலுள்ள ஆய்வமைப்பொன்று உலகிலுள்ள தோற்றுப்போய்விட்ட நாடுகள் பட்டியலொன்றைத் தயாரித்தது.
பல்வேறு குறிகாட்டிகளை அடிப்படையாகவைத்து அறிவியலடிப்படையில் இது தயாரிக்கப்பட்டது. எங்கே ஒரு அரசாங்க்கம் தனது ஆள் புலத்த்தின் கட்டுப்ப்பாட்டினை இழக்க்கிறதோ, எங்கே அதன் கணிசமான குடிமக்க்கள் அதனைச் சட்ட்டபூர்வ்வமான அரசாங்க்கமாகக் கருத மறுக்கின்றார்களோ, எங்கே அதனால் தனது மக்களுக்குரிய பாது காப்ப்பினை வழங்க்கமுடியாமல் அவர்க்களுக் கான பொதுத்தேவைகளை நிறைவேற்ற்ற முடியாமல் இருக்கின்றதோ, எங்கே தனது படைப்பலப் பிரயோகத்தில் தனியுரிமையை இழக்கிறதோ, அங்கே அது தோற்றுப்போய்விட்ட அரசாகக்கருதப்ப்படும். இத்தகைய நிலையிலுள்ள 40 நாடுகளை மிக ஆபத்தான, ஆபத்தான நிலை என இரண்டாக வகுத்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் சிறிலங்கா 25ஆவது இடத்திலுள்ளது. 2006ஆம் ஆண்டு அறிக்கையில் சிறிலங்கா எந்த இடத்தைப் பெறும்? ஈராக், ஆப்கான், பாகிஸ்தான் போன்றவை இடம் பெறும் முதல் பத்து நாடுகள் வரிசையிலா? இவ்வாறு சிறிலங்கா தோற்றுப் போவதற்கு எது பிரதான காரணம்? அமெரிக்கப் பேராசிரியர் புல்ஜென்ஸ் கூறுகின்றார். எதையும் நினைவில் கொள்ளாத, ஞாபகத்தில் வைத் திருக்க்காத மறதித் தேசமிது. மாமனிதர் சிவராம் கணக்கிட்டு எழுதியதுபோல தனது முழு படைபலத்தின் 80 விழுக்காட்டிற்கு மேலாகத் திரட்டி, பல நாட்களாக ஒரு நாளில் பல தடவைகளாகப் படையெடுத்தும் அக்கினிச் சுவாலை சந்தித்த படுதோல்வியைக் கூட மறந்துவிட்ட கடும் மறதிநோயால் அவதிப்படும் தேசமிது.
1956ஆம் ஆண்டு இனக்கொலை நிகழ்த்தப் பட்ட காலம் தொட்டு மிக அண்மைக்காலம் வரை தமிழ் மக்கள் திட்டமிட்டுப் பாதுகாப்புத் தரப்பால் படுகொலை செய்யப்படும் இந்த நாள்வரை 150இற்கு மேற்பட்ட கொத்துக்கொத்தான படுகொலை நிகழ்வுகள் பதிவாக்கப் பட்டுள்ளன. 1940களிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டுகளாகத் தமிழ்த் தேசிய இனத்தின் பாரம்பரிய வதிவிடங்கள் பறித்தெடுக்கப்பட்டன. (இவை தொடர்பில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட திருமலை ரவி ஏறத்தாழ எண்ணாயிரம் சதுரகிலோமீற்றர் பரப்பளவு சிங்க்களவர் நடத்துதுவது பழிவாங்க்கல், படுகொலையல்ல்ல. இது திட்ட்டமிட்டு மேற்கொள்ள்ளப்ப்படும் இனக்கொலை. ஒரு இனத்தைப் புவிப்ப்பந்த்திலிருந்து அகற்ற்றப் பல வழிகளாலும் மேற்கொள்ள்ளப்ப்படும் திட்ட்டமொன்ற்றின் முதன்மைச் செயற்ப்பாடுஎன்ப்பதை உணர்த்தலே. இதன் விளைவென்ன? 1956இன் பின்னர் தமிழர் குருதியால் குளிப்பாட்டப்பட்ட இத் தேசத்தில் மீண்டும் குருதிக் காட்டின் ஓலங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையை சர்வதேசம் ஓரளவிற்காவது புரியத் தொடங்கியுள்ளது என்று நாம் கூறமுடியும். வழமையாகப் பேச்சுக்களில் முடக்கம், தேக்க மேற்படும் பொழுது போராட்ட இயக்கங்கள்மேல் பழிபோடும் உலகு இப்போது இங்கு இரு தரப்பையும் கண்டித்து அறிக்கை விட்டதோடு நிற்காமல் முத் தரப்பையும் கடுமையாகக் கண்டிக்கும் நிலை யிலுள்ளது. நீதிக்குப் புறம்பான வகையில் நிகழ்த்தப்படும் படுகொலைகளை விசாரிக்கும் ஐ.நாவின் விசேட பிரதிநிதியான பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தன் வருடாந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். சிறிலங்கா அரசு அரசியற் படுகொலைகள் பற்றிய விசாரணைகளை முறையாக மேற் கொள்ளவில்லை.
இவை தொடர்பில் எவரும் அடையாளம் காணப்பட்டதாகவோ, கைதான தாகவோ அறியப்படவில்லை. அப்படி ஏதும் நடந்திருந்தாலும் சாட்சிகள் கடும் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்கு அண்மையில் திருமலையில் ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தையான மருத்துவர் மனோகரனுக்கு விடப்படும் மிரட்டல்களை உதாரணமாகக் காட்டலாம். மிக அண்மையில் சிங்களத் தேசத்திற்குச் சற்று அதிர்ச்சியூட்டும் அறிவிப்பொன்று வெளிவந்தது. ஏப்பிரல் 1995ஆம் ஆண்டு அமெரிக்க ஒக்கலகோமா அரசு கட்டிடம் மீதான குண்டுத்தாக்குதலின் பின் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட TKB எனப்படும் (TERRORISM KNOWLEDGE BASE) பயங்கரவாதத் தகவல் தளம் எனப் படும் அமைப்பே ஜாதிககெல உறுமயவின் முன்னோடி அமைப்பான சிகல உறுமயவைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலில் சேர்த்துள்ளது. இவ்வாறாக ஆங்காங்கே சருவதேசம் நீண்ட உறக்கத்திலிருந்து விழிப்பதாகத் தெரிந்தாலும் இவையாவும் சிங்கள தேசத்தில் ஏதாவது தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது ஐயத்திற்குரியது. தனது போக்கிற்குச் சாதகமற்ற கருத்துக்களைப் புறந்தள்ளுவதே சிங்களத்தின் இயல்பு. நிலம் பறிக்கப்பட்டதாகக்கணித்துள்ளார்.) 1940கள் தொட்டு இற்றைவரை நிலப்பறிப்பும், இனக்கொலை களும் தொடர்கின்றன. எனவே எம் மக்கள் மனம் குமுறிக் கொந்தளித்து குரலெழுப்புகின்றனர்.எனவே இத்தகைய நிலையிலே மீண்டும் படுகொலைகள் அரங்கேற எம் தாயகம் குருதியால் குளிப்பாட்டப்படுகின்றது.
1956ஆம் ஆண்டு யூன் மாதம் 05ஆம் திகதி இங்கினியாகலையில் கரும்புத் தொழிற்சாலையில் பணி செய்துகொண்டிருந்த 150 தமிழ் தொழிலாளர்கள் அதே தொழிற்சாலை யில் பணி செய்த சிங்களவரால் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்டு அரைகுறை உயிருடன் இருந்தவர்களையும் எரியும் தீயில் தூக்கிவீசிய அக்கணம் தொட்டு இக்கட்டுரை எழுதி முடிக்கும் வரை ஆங்காங்கே கொல்லப்பட்டு வீசப்பட்டு கிடக்கும் தேசப்பறற்ளாரை சிங்க்களவர் நடத்துதுவது பழிவாங்கல், படுகொலையல்ல. இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இனக்கொலை. ஒரு இனத்தைப் புவிப்பந்திலிருந்துது அகற்ற்றப் பல வழிகளாலும் மேற்கொள்ளப்படும் திட்டமொன்றின் முதன்மைச் செயற்ப்பாடு என்ப்பதை உணர்த்தலே.
இனக்கொலையென்றால் என்ன? இதற்குரிய சட்ட வரைவிலக்கணம் என்ன? போலந்து நாட்டைச் சேர்ந்த யூத அறிஞரான ராபேல் லெம்கின் (RAPHAEL LEMKIN 1900 - 1959 ) என்பவர் யூதருக்கெதிரான கிட்லரின் இனக்கொலையின் பின்னணியில் எடுத்த அயராத முயற்சியின் விளைவாகச் சருவதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனக்கொலையைத் தண்டிப்பதற்கான, தடுப்பதற்கான சட்டக்கோவையொன்று 1948ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் திகதி ஐ.நா பொதுச்சபையில் அங்கீகரிக்கப்பட்டது.
1951ஆம் ஆண்டு சனவரி 12ஆம் திகதி (தீர்மான இல 260 (111)) மூலம் இவ்விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதன் விதிகள் பல நாடுகளின் தேசிய குற்றவியல் சட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாகச் சருவதேசக் குற்றவியல் நீதிமன்றும் (ICC) தாபிக்கப்பட்டது. இவற்றின்படி பின்வருவன வற்றில் ஏதாவது ஒரு செயற்பாடு தேசியத்தின் இனக்குழுமத்தின், மதக்குழுவொன்றின் அல்லது இவை போன்றவற்றினை, முழுமை யாகவோ, பகுதியாகவோ அழிப்பதற்கான இலக்கைக்கொண்டு நிகழ்த்தப்படுமாயின் அது இனக்கொலையாகும். அவையாவன
(அ) இத்தகைய குழுவொன்றின் அங்கத்தவர்களைக் கொலைசெய்தல்.(ஆ) இத்தகைய குழுவொன்றின் அங்கத்தவர்களுக்கு உடல் ரீதியான அல்லது மனரீதியான கடுமையான தீங்கினைச் செய்தல். (இ) இத்தகைய குழுவொன்றின் பௌதிக இருப்பினை முற்றாக, அல்லது பகுதியாக அழிப்பதற்காக இக்குழுவின் வாழ்நிலையில் வேண்டுமென்றே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தல். (ஈ) இக் குழுவினுள் குழந்தைகளின் பிறப்புக்களைத் தடுக்கும் நோக்குடன் செயற்படல். (உ) இத்தகைய குழுவொன்றின்குழந்தைகளை இன்னொரு குழுவிற்குக் கைமாற்றிவிடல்.
ஆகவே, தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் மீது நடத்தப்படுவது இனக்கொலையே. இனக்கொலை என ஒவ்வொரு முறையும் உலகால் உச்சரிக்கப்படும் பொழுது அது மீண்டும் நடந்துவிடக் கூடாதென்பதே உலகின் தியானம் எனப்பட்டாலும் அது உண்மையில் அவ்வாறில்லை. நாசிகளிடமிருந்து கற்ற பாடம் உலகிற்கு எவ்வகையில் பயன்பட்டது? குறிப்பாக றுவண்டா வில் நடைபெற்ற 10 இலட்சம் மக்களின் படுகொலைகளை உலகம் நினைத்திருந்தால் தடுக்க முடிந்திருக்கும் என்பது பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது. இனக்கொலை நடக்கமுன்னர் அதையுணர்ந்து தடுக்காமல், நடந்த பின் குற்றவியல் நீதிமன்றுகளை உருவாக்கி விசாரிப்பதால் என்ன பயன் என்பது அறிஞர் களால் முன் வைக்கப்படும் விவாதம். எனவே சிறிலங்காவில் கொலைவெறி பிடித்தாடும் குழுக்களுக்கு நேரடியாகத் துணைபுரியும் சிறிலங்கா அரசோடு நட்புப்பேணும் உலகம், அதைப் பலப்படுத்திட உதவும் உலகம் இன்னொரு றுவண்டாவாக, பொசுனியாவாக இத்தீவு மாறாமல் தடுத்திட முனையும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதியென்பதன் பொருளென்ன? இது இனக்கொலைக்குத் தூண்டலாக அமைகிறதல்லவா? எனவேதான் மிகக் காத்திரமான,தீர்மானமான முடிவொன்றைச் சர்வதேசத்தின் முன் புலிகள் இப்போது வைக்கின்றார்கள்.
தள்ளி நில்பிய்த்துப் பிடுங்குவதற்குநகங்கொண்டபிசாசே உன் கையை எடு!எம் உயிர் கொண்டபிணைப்பின் வலயத்துள்ஏன் நுழைந்தாய்?உந்திக் கமலத்தின்உடனிருப்பை ஏன் பறித்தாய்?
குறு நகை மலர்க்களைகுழந்தைகளின் கழுத்தைதிருகியெறிந்ததெனகாலடிக் கீழீழ் போட்ட்டாயே பாவிபால் குடியின் மென் கதறல்கேளாச் செவி படைத்த்தாய்!!
இத்தகைய நிலையிலே புலிகள் புதிய பரிமாணமொன்றினைப் புலப்படுத்து கின்றார்கள். சிங்களமும் சருவதேசமும் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளைத் தாமேநிறைவேற்றுகின்றனர். சிங்களத்தினை ஷஷசன நாயகப் படுத்தும் பொறுப்பு - போர்நிறுத்த உடன்பாட்டின் சிங்களத் தரப்பின் கடப்பாடுகளை நிறைவேற்றும் பொறுப்பு. (ஏன் சிங்களத்தினை பேச்சிற்கு அழைத்துவந்ததும் புலிகளேயல்லவா) இவை யாவற்றினையும் விட இன்னொரு இனக்கொலை இங்கே நிகழாமல் தடுத்திடும் இமாலயப்பணியும் புலிகளுக்கேயுரியது. இவ்வகையில் எமது தாயகம் வீரியரின் பூமியாக இப்போது திகழ்கின்றது.
வராலாறு தமிழரைப் பார்த்துச் சொல்கின்றது.அறிகஉனதிருப்பில் இமயத்தின் வலுவேற்றம்உச்சியிலேவிடுதலை ஞாயிற்றின் சிரசுதயம்மீட்டெடு - மீட்டெடுபுவியெங்கும் உயிர்க்குருதிச் சுற்றோட்டம்நிகழவிடு.
- க. வே. பாலகுமாரன
அல்லைப்ப்பிட்டிப் படுகொலை - 2006 (இங்கு கையாளப்பட்ட அனைத்து கவிதை வரிகளும் நன்றியுடன் கவிஞர் வில்வரத்தினத்தின் காலத்துயர் கவிதை நூலிருந்து பெறப்பட்டவை)

திங்கள், 12 ஜனவரி, 2009

இக்கடிதத்தை படித்த பிறகாவது.., உலகத் தமிழர்களே?

இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று
எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்
(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த
ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக்
குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின்
ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)
நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?
குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில்
கையெழுத்தி இடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில்
கடிதம் எழுதுகிறேனா?
எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின்
குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய
போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்
கரைந்திருப்பீர்கள்......
எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு
வரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் " மஸ்தானா,
மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.
அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின்
மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில்
அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை,
நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும்,
சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......
அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட்
அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப்
பார்த்திருந்தீர்கள்....அதனால் தான் எழுதவில்லை.........
ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை
நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம்
மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல,
இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும்
திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.
ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை
அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?
இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு 20 இரங்கற்பா
அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவது
கிடைக்கும் அல்லவா?
இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு
பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும்
வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம்
பாவமாவது குறையட்டும்.......
மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின்
பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள்
எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,
குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை
வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது
நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான
குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத்
தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள்
தடை படுமே என்று தான் அப்போது எழுதவில்லை,
எங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக்
கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் "
சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.
அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின்
இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால்
அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில்
எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது,
தமிழர்களே?அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில்
முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை
அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று
போவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில்.
முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும்,
அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து,
எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவு படுத்தும்.
ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில்
நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்.......
அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின்,
வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத்
தோன்றவில்லை.....எனக்கு....
அமைதியாய் விடியும் பொழுதும்,
அழகாய்க் கூவும் குயிலும்,
தோகை விரிக்கும் மயிலும்,
காதல் பேசும் கண்களும்,
தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,
தாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,
அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,
கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழைய நினைவுகளும்,
இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா ௨லகத் தமிழர்களே?
எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம்
அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து
எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள்,
உலகத் தமிழர்களே........
ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டு போன இனத்தின்
விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும்
இருக்கிறது.
இப்படிக்கு,
வலி கலந்த நம்பிக்கைகளுடன்,
உங்கள் தொப்புள்கொடி உறவு, தமிழீழத்திலிருந்து

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

போஸ்" கொடுக்கும் தமிழச்சிகள்!

சென்ற ஆண்டு கேரளாவைச் சேர்ந்த இந்தியாவின் பிரபல பெண்ணிய எழுத்தாளரான கமலாதாஸிடம் ஆனந்த விகடன் பேட்டி கண்டது. அப்பொழுது அவரிடம் "உங்களுக்கு பிடித்த தலைவர் யார்" என்று கேட்கப்பட்டது.

கமலாதாஸ் எவ்வித தயக்கமும் இன்றி பளிச் என்று சொன்னார், "புலிகளின் தலைவர் பிரபாகரன்". அத்துடன் புலிகளை இந்தியா தீவிரவாதியாக சித்தரிப்பது தவறு என்றும் சொன்னார்.

இத்தனைக்கும் கமலாதாஸ் ஒரு தமிழ் பெண்மணி அல்ல. ஆனால் தமிழ் மக்களின் தலைவரையும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தன்மையையும் உணர்ந்தவராக இருந்தார்.

இப்படி வேற்று இனத்தை சேர்ந்த பலரே தமிழீழ மக்களின் போராட்டம் சரியானது என்று ஏற்றுக் கொள்கின்ற போது, கூலிக்கு மாரடிக்கும் தமிழர்கள் சிலர் தமிழீழ போராட்டத்தை கொச்சைப் படுத்தி துரோகம் புரிந்து வருகின்றார்கள். இந்த இழிவான செயலில் ஆண்களுக்குப் போட்டியாக சில பெண்களும் ஈடுபடுவதுதான் வேதனையானது.

சம உரிமை என்பதை தவறாகவே புரிந்து வைத்திருக்கும் இந்தப் பெண்கள் துரோகம் செய்வதிலும் சம உரிமை வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

தமிழீழத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒரு பெண்கள் குழு ஆண்டு தோறும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம். இந்த ஆண்டும் "பெண்கள் மாநாடு" என்று பெயரில் இருபதிற்கும் குறைவானவர்கள் கூடினார்கள். இவர்களின் உள்நோக்கம் புரியாத சிலரையும் பெண்ணுரிமை என்று சொல்லி சந்திப்பிற்கு அழைத்திருந்தார்கள்.

வழமை போன்று இந்த ஆண்டும் தமிழீழப் போராட்டத்தை வேறவேறு வடிவங்களில் கொச்சைப்படுத்தினார்கள். இந்த பெண்கள் சந்திப்பை ஒழுங்கு செய்வதில் முன்னணியில் நின்று வேலை செய்யும் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் "இலங்கையில் தமிழ் பெண் தற்கொலைதாரிகள்" என்று ஒரு கட்டுரையை வாசித்தார்.

அந்தக் கட்டுரையின் மூலம் தமிழீழப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள், பெண் போராளிகள் என்று அனைத்தையுமே இழித்துரைத்தார். ஈழப் பிரச்சனை பற்றி மற்றவர்களும் இதையொத்த செயலைத்தான் இந்தச் சந்திப்பில் செய்தனர். இவர்கள் சென்ற ஆண்டும் இதைத்தான் செய்தார்கள். இந்த ஆண்டும் செய்தார்கள். இனிமேலும் செய்வார்கள்.

தமிழீழ மக்களின் மிகப் பலமான ஆயுதமாக உயிராயுதம் இருக்கிறது. இந்த உயிராயுதமாகிய கரும்புலிகளை கலைக்கச் சொல்லி ஏகாதிபத்திய அமெரிக்காவும் சொல்கிறது. பார்ப்பனிய இந்தியாவும் சொல்கிறது. இனவாத சிங்கள அரசும் சொல்கிறது. இந்தப் பெண்கள் சந்திப்பும் சொல்கிறது.

இதில் இருந்தே இவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

பெண் விடுதலை என்பதில் பல புரட்சிகளை தமிழீழ தேசம் செய்து காட்டியிருக்கிறது. பல நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள். சண்டைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட பெண்கள், சண்டை முடிந்ததும் மீண்டும் அடுக்களைக்கு அனுப்பப்பட்டார்கள். குழந்தை பெறுவதற்கு அனுப்பப்பட்டார்கள்.

ஆனால் தமிழீழத்தில் மட்டும்தான் பெண்களும் நிர்வாகத்தில் சம அளவு பங்கேற்கிறார்கள். தமிழீழத்தில் நடைபெறும் நீதித்துறை, காவல்துறை, அரசியல்துறை, நிதித்துறை மற்றும் பல நிறுவனங்களில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

யுத்த களங்களில் கூட பெண்களுக்கு பின்தள வேலைகள் மட்டுமே மற்றைய நாடுகள் வழங்குகின்றன. தமிழீழத்தில் பெண்களே பல சண்டைகளை முன்னின்று நடத்தி சிங்களப் படைகளை விரட்டி அடித்து சாதனை புரிந்திருக்கிறார்கள்.

இப்படி போர் என்றாலும் சரி, நிர்வாகம் என்றாலும் சரி, பெண்களுக்கு சம உரிமையை தமிழீழ தேசம் வழங்கி இருக்கிறது.

பழமைவாத மரபுகளுக்கு பல நூற்றாண்டுகளாக சிக்குப்பட்டிருந்த தமிழர் தேசம் கண்டுள்ள மாற்றங்கள் வியக்கத்தக்கன. மிகப் பெரும் புரட்சிகள் இவைகள். வீடுகளிலும் வீதிகளிலும் இருந்த பெண்ணடிமைத்தனத்தில், இன்றைக்கு வீதிகளில் இருந்த பெண்ணடிமைத்தனம் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் பெண்கள் வீதிகளுக்கு வந்து இனவாத அடக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை தமது தொழிலாக சில பெண்கள் கொண்டுள்ளார்கள். தங்களை தமிழச்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், அப்படிச் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.

பெரும் வல்லரசுகளை எதிர்த்து புரட்சி செய்கின்ற பெண்கள் தமிழீழத்தில்தான் இருக்கின்றார்கள் என்பதை காகிதத்தில் கலகம் புரிவதாக சொல்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பெண்களின் எழுச்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களிடம் போய் தங்கள் கலகத்தை காட்ட வேண்டும். ஆனால் காகிதக் கலகக்காரர்களும் தமிழீழ பெண்களின் எழுச்சிக்கு எதிரானவர்களுடன் கைகோர்த்து புகைப்படத்திற்கு "போஸ்" கொடுக்கிறார்கள்.

இவர்களால் புகைப்படத்திற்கு "போஸ்" கொடுக்க மட்டும்தான் முடியும். இதைவிட பெண்களுக்கான விடுதலையில் ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது.

ஆனால் ஒரு காலத்தில் முகத்திற்கு பவுடர் பூசி நகை அணிந்து புகைப்படத்திற்கு "போஸ்" கொடுத்துக் கொண்டிருந்த தமிழீழத்தின் பெண்கள் கூட்டம், இன்றைக்கு வேர்த்து வடிகின்ற முகத்தோடு உச்சி வெய்யிலில் மக்களின் விடுதலைக்காக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். புரட்சி செய்கின்ற இந்தப் பெண்கள் தமிழீழத்தில் இருந்து பெண்ணடிமைத்தனத்தை முற்றிலுமாக இல்லாது ஒழிப்பார்கள்.

யாகத் தீயில் எறியப்பட்ட தமிழனின் தன்மானம்!

தமிழீழத்தின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆரம்ப காலங்களில் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அவரது திருமணம் இந்து முறைப்படி ஒரு இந்துக் கோயிலில் நடந்தது. சில காரியங்கள் சாத்தியமான பொழுது இந்துக் கோயில்களில் நேர்த்திக் கடனை செய்தும் உள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் பகுத்தறிவாளர்களுடன் ஏற்பட்ட தொடர்புகளினால் அவரிடம் பகுத்தறிவுச் சிந்தனை வளர்ந்தது.

இன்று போராளிகளின் திருமணங்கள் தமிழ் முறைப்படியே நடக்கின்றன. புரோகிதர்கள் இல்லாமல் சமஸ்கிருத மந்திரங்கள் இல்லாமல் இந்தத் திருமணங்கள் நடக்கின்றன. போராளிகளுக்கு வட மொழிப் பெயர்களை தவிர்த்து தூய தமிழில் பெயர்கள் வைக்கப்படுகின்றன. பிறக்கும் குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் வைத்தால், 10000 ருபாய்கள் அக் குழந்தைக்காக தமிழீழ வைப்பகத்தில் வைப்பில் இடப்படுகிறது. மற்றைய ஆரியப் பார்பன கொண்டாட்டங்களை விட தமிழர்களின் திருநாளாகிய பொங்கல் விழா முன்னிலைப்படுத்தப்படுகிறது.

தமிழீழத்தில் படிப்படியாக நிதானமான முறையில் பகுத்தறிவு வளர்க்கப்படுகிறது. பார்பன மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பரபரப்புரைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.

ஆனால் இங்கு ஐரோப்பாவில் தமிழர்கள் மத்தியில் மூட நம்பிக்கைகளே வளர்த்தே தீருவோம் என்று ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது. ஈழத்தின் பக்கம் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக கறுப்புப்பட்டி வாரம் செய்தார்கள். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. உண்மையில் இது ஒரு நல்ல விடயமும் கூட. ஆனால் கறுப்புப் பட்டி வாரத்தின் கடைசி நாளில் ஐரோப்பாவில் உள்ள இந்து ஆலயங்களில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் வெற்றி பெறுவதற்காக யாகம் செய்துதான் சகித்துக் கொள்ள முடியாத மூடத்தனத்தின் உச்சமாகப் போய்விட்டது. இவர்கள் தமிழினத்தின் தன்மானத்தை தீயில் போட்டு யாகம் செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

யாகம் என்பது ஆரியர்கள் மேற்கொள்ளும் ஒரு வழக்கம். யாகம் குறித்து அதிகமாக ரிக் வேதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேத்தத்தின் விளக்கத்தின்படி எதிரிகளை வெல்வதற்கு யாகம் செய்யப்பட வேண்டும். யாகமானது ஆடு, மாடு, குதிரை போன்றவைகள் வெட்டப்பட்டு தீயில் போடப்பட்டே செய்யப்பட வேண்டும். இவைகள் தேவர்களின் அரசனும் உடம்பு முழுவதும் பெண்குறிகளைக் கொண்டவனும் ஆகிய இந்திரனுக்கான படையல்களாக கொள்ளப்படும். இவ்வாறு ரிக் வேதம் கூறுகிறது. யாகத்தின் மீது ஓதப்படும் மந்திரங்கள் தமிழின எதிர்ப்புக் கொண்டவை. "ஓ, இந்திரனே உன் பாதங்களை சூத்திரன் மீது இறக்கு" என்பது போன்ற வார்த்தைகளோடு மிகவும் ஆபாசமான வார்த்தைகளுமே யாகத்தின் போது மந்திரமாக ஓதப்படுகின்றன

பௌத்த, ஜைன மதங்கள் உருவாகி ஜீவகாருண்யத்தை போதித்து, அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பொழுது, யாகங்களில் ஆடு, மாடுகள் வெட்டப்படுவது குறைந்து போனது. தற்பொழுது ஆடு, மாடுகளுக்கு பதிலாக நெய் வார்க்கப்படுகிறது. ஆனால் மந்திரங்கள் அப்படியேதான் இருக்கின்றன. இந்த மந்திரங்களை தமிழில் சொன்னால், அதன் அர்த்தம் விளங்கி மந்திரம் சொல்பவனை மானமுள்ள தமிழன் யாராவது எட்டி உதைத்து விடுவான் என்ற அச்சத்திலேயே இந்த மந்திரங்களை பார்ப்பனர்கள் தமிழில் சொல்வதில்லை.

இப்படி ஆரியர்கள் தமிழனை ஏமாற்றுவதற்கும் அடிமை ஆக்குவதற்கும் உபயோகித்த சூழ்ச்சிகளில் முக்கியமானது இந்த யாகம். எதிரியை வெல்வதற்கு யாகம் செய்வது ஆரியனின் மரபு என்றால், போர் செய்வது தமிழனின் மரபு. இன்றும் ஈழத்தில் தமிழன் அதைத்தான் செய்கிறான். யாகம் செய்வது தமிழினத்தின் மரபுக்கும் தன்மானத்திற்கும் முரணானது.

ஆனால் எமது உரிமைப்போர் வெல்வதற்கு ஐரோப்பாவில் யாகம் செய்தார்கள் என்றால், இதற்கு ஏற்பாடு செய்தவர்கள் தமிழினத்தின் போராட்டம் குறித்து எவ்வித தெளிவும் அற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அதுவும் விடுதலைப் போராட்டத்திற்காக அல்லும் பகலும் உழைக்கின்ற சில பணியாளர்களும் இந்த யாகத்திற்காக ஓடியாடி வேலை செய்தார்கள் என்கின்ற செய்தி மிகவும் வேதனையை தருகிறது. இந்த பார்ப்பனிய மூடத்தனங்கள் குறித்து சிறப்பான கட்டுரைகள் எரிமலை, ஈழமுரசு போன்ற ஊடகங்களின் பலமுறை வெளிவந்திருக்கிறது. இவைகளை விற்பதற்கு ஓடித் திரிபவர்கள் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி இந்தக் கட்டுரைகளைப் படித்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள்.

இன்று யாகம் செய்தவர்கள் நாளை "தமிழீழம் கிடைப்பதற்கு போராளிகள் அனைவரும் அலகு குத்தி காவடி எடுக்க வேண்டும்" என்று ஆலோசனை சொன்னாலும், சொல்வார்கள். எதற்கும் விடுதலைப்புலிகள் இவர்களோடு அவதானமாக இருப்பது நல்லது.


வி.சபேசன் (19.06.06)

சனி, 10 ஜனவரி, 2009

தமிழர்களின் சுய நிர்ணய உரிமையும் தத்துவார்த்த குரல்களும்

ஈழ விடுதலை:
தமிழ்கத் தமிழரும், தமீழீழத் தமிழரும் - இந்திய அரசை நம்புவது கொலையாளி வீட்டில் அடைக்கலம் புகுவதற்கே ஒப்பாகும்

வே. ஆனைமுத்து



ஈழ விடுதலை பற்றி, 1992க்குப் பிறகு நீறுபூத்த நெருப்பாகத் தமிழகத் தமிழரிடையே தேங்கிக்கிடந்த ஈழவிடுதலை ஆதரவு உணர்வு, 2.10.2008க்குப் பின்னர், தமிழகத்தில் எல்லாத் தரப்பினரிடமும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. இதற்கு உடனடிக் காரணராக விளங்குவோர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையினரும், மாண்புமிகு தமிழக முதல்வரும் ஆவார்கள். இவர்கள் எடுத்த முன்முயற்சி - கட்சி, மாவட்டம், தேசம், பிராந்தியம் அல்லது மாநிலம் என்கிற எல்லாவற்றையும் கடந்து, இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வாழும் ஏழு கோடித் தமிழரையும் பிற மொழியினரையும் பற்றிக் கொண்டது.

இந்தியத் தலைநகரான புதுதில்லியில் கடந்த ஓராண்டாகத் தமிழ் இனப் பல்கலைக் கழக மாணவர்களால் தூக்கிப்பிடிக்கப் பட்ட ஈழத்தமிழர் சிக்கல், 14.11.2008 அன்று எல்லா மாநிலங் களையும் சார்ந்த மாணவர்களாலும் தூக்கிப் பிடிக்கப்பட்டது. இதற்கும் அடித்தளமாக விளங்குவோர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாணவர் பிரிவினராவர்.
தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, அவர் அனைத்துக் கட்சியினரின் கூட்டத்தைக் கூட்டி, தக்க முடிவுகளை எடுத்து இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளின் தலையான கோரிக்கை, "ஈழத் தமிழர் பேரிலான போரை இலங்கை அரசு உடனே நிறுத்துவதற்கான அழுத்தத்தை இந்திய அரசு தரவேண்டும்'' என்பது. ஆனால் இந்திய அரசு அப்படிச் செய்யவில்லை.

இதுபற்றிப் பேசுவதற்காக, முதலில் இந்தியாவுக்கு வந்த இராசபக்சேவின் தம்பி பாசில் இராசபக்சே - மகிந்த இராசபக்சேவின் தலைமை ஆலோசகர் என்கிற நிலையில் இருந்துகொண்டு, இங்குள்ளவர்களிடம் என்ன பேசினார்? "விடுதலைப் புலிகளின் பேரிலான தாக்குதலை நிறுத்த முடியாது. துன்பத்துக்கு ஆளாகும் இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா உதவிகளையும் இலங்கை அரசு செய்யும்'' என்று மட்டுமே அவர் பேசினார்.

இந்த நிலையை மாற்றிட வழி காணுவதற்கு, "தமிழகச் சட்ட மன்றத்தில், ஈழ விடுதலை கோருவோர் பேரில் நடத்தப்படும் போரைத் தடுத்து நிறுத்திட இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு ஆவன செய்யவேண்டும்'' என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் கோரினர்.
மா.பெ.பொ.க. சார்பில் 13.10.2008இல் இப்படிப்பட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எல்லாக் கட்சிகளின்கோரிக்கையையும் ஏற்று, 12.11.2008இல் சட்டமன்றத்தில் இதுபற்றிய நெடியதோர் தீர்மானத்தை நிறைவேற்றி, உணர்ச்சிமிக்க உரையாற்றினார். இதுமிகவும் வரவேற்கத்தக்கது. இதற்குமேல், இந்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காகத் தமிழ்நாட்டு அரசு எதையும் செய்திட அதிகாரம் இல்லை.
ஆனால், தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட இக் கோரிக்கையை, இதே வடிவில் அப்படியே, பிரதமர் மன்மோகன்சிங் மகிந்த இராசபக்சேவிடம் எடுத்துக் கூறினாரே அன்றி, "போரை நிறுத்துங்கள்; பேச்சுவார்த்தை நடத்தித் தமிழர்களுக்கு உரிய உரிமைகளை வழங்கும் அரசியல் தீர்வை அளியுங்கள்'' என்று அவர் இலங்கை அதிபரிடம் கூறவில்லை; பிரணாப் முகர்சியும் அப்படிக் கூறவில்லை.

இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் நான்கு ஆகும்.

1. திருமதி. பண்டாரநாயகா ஆட்சிக்காலத்தில், அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுத், தமிழர்களை ஒடுக்குவதற்காக, இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பியவர் காங்கிரசுப் பிரதமர் இந்திராகாந்தியே ஆவார். அப்போது முதல் இலங்கை இராணுவத்துக்கு எல்லா உதவிகளையும் செய்வது இந்திய அரசு.

2. செயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் அவருடைய கோரிக்கையை ஏற்று, இலங்கைக்கு 20,000 இந்தியப் படைவீரர்களையும், இராணுவ டேங்குகளையும் மற்ற இராணுவத் தளவாடங்களையும் 1987இல் அனுப்பியவர் காங்கிரசுப் பிரதமர் இராசிவ் காந்தி.

இராசிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது விடுதலைப் புலிகளால்தான் என்று குற்றஞ்சாட்டி, பிரபாகரனைப் பிடித்துத்தர அரசுப் பரிமாற்ற ஆணையும் வெளியிட்டுவிட்டு, இந்தியாவில் அமைப்புரீதியாக இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பேரில் தடையையும் விதித்து நாளதுவரை அதைக் கால நீட்டிப்புச் செய்துகொண்டு, வெளிப்படையாக இலங்கை அரசுக்கு 2005 முதல் எல்லாவகையான இராணுவ உதவிகளையும் செய்வது தான் - கல்நெஞ்சம் படைத்த பிரதமர் மன்மோகன்சிங் அரசு. எனவே தான் அங்கே போர் தொடர்ந்து நடைபெற்று விடுதலைப் புலிகள் அடியோடு அழிக்கப்படுவதற்கு எல்லாம் தந்து உதவும் இந்திய அரசு, இப்போதும் "போரை நிறுத்துங்கள்'' என்றுகூறி இலங்கை அரசுக்கு மிகு அழுத்தம் தர முன்வரவில்லை; இனியும் முன்வராது.

இது இப்படியே நீடிக்குமே அன்றி, காங்கிரசுக் கட்சி ஆட்சியோ - அதைவிடக் கேவலமான பாரதிய சனதாக் கட்சி ஆட்சியோ - தமிழீழம் மலருவதை ஒருபோதும் விரும்பாது; அனுமதிக்காது என்பதையும் நாம் உணரவேண்டும்.

ஏன் இந்த இழிநிலை?

1. இந்தியாவிலுள்ள எந்த அனைத்திந்தியக் கட்சியும் "இந்தியா ஒரே தேசம்'' என்பதிலிருந்து விடுபடவில்லை; இந்தியாவிலுள்ள மொழிவழி மாநிலங்ளுக்குத் தன்னாட்சி உரிமை தரவேண்டும் என்பதை ஒரு கொள்கையாக எந்தத் தேசியக் கட்சியுமே ஏற்றிருக்கவில்லை. இதில் எவருக்கும் அய்யம் இருக்க இடம் இல்லை.

2. தமிழகத்தில் 1920களில் விதைக்கப்பட்ட பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு உணர்வும், 1938இல் தூக்கிப்பிடிக்கப்பட்ட இந்தி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியும்; 1945 முதல் பெரியாரால் முன்வைக்கப்பட்ட தனித்தமிழ்நாடு பிரிவினைக் கோரிக்கையும் - இந்தியா முழுகுவதற்கும் யாராலும் எடுத்துச்செல்லப்படவில்லை. இந்திய மய்ய அரசு பார்ப்பன ஆதிக்க அரசாகவே இன்றும் நீடிக்கிறது; இந்தி ஆதிக்கம் தெளிவுபட வந்துவிட்டது; மொழிவழித் தன்னாட்சிக் கோரிக்கை தமிழகத்திலேயே கேட்பாரற்றதாக ஆகிவருகிறது.

3. இந்த நிலையில் இராமேசுவரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழீழத் தமிழர்களுக்கு என்று ஒரு தனிச் சுதந்தரநாடு அல்லது ஒரு தன்னாட்சி (Autonomy) நாடு வர வழிவிட்டுவிட்டால், தெற்குக் கடல்பகுதியிலும், தமிழ்நாட்டிலும் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் நேரிட்டு இங்கேயும் தனிநாடு கோரிக்கை துளிர்த்துவிடும் என்று ஒரு கற்பனையை உருவாக்கிக் கொண்டு, அதன் காரண மாகவே தமிழகத் தமிழர் ஆறுகோடிப் பேரின் சார்பில் தமிழக அரசும், தமிழக முதல்வரும் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விடுத்த வேண்டுகோளை அப்படியே முன்வைக்கவும், வற்புறுத்தவும் இந்தியப் பிரதமர் முன்வரவில்லை; இனியும் அவர் முன்வரமாட்டார். அப்படியானால், அதையே முன்வைத்துத் தமிழக ஆட்சியாளர் பதவியைவிட்டு விலகத்தான் முடியும். அப்படி விலகி விடுவதால் மட்டும் இந்திய ஆட்சியில் இன்று இருப்பவர் களுக்கோ, நாளைக்கு வரப் போகிறவர்களுக்கோ ஒருசிறு இழப்பும் இல்லை.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் 57+2=59 பேர்கள். முதலில் இவர்கள் ஓர் அணியினராகச் சேரவில்லை. ஒருவேளை இவர்கள் இப்போது விலகினால் அதனால் அரசு கவிழாது. எப்போது விலகினாலும் ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிவீசி 60 உறுப்பினர்களின் ஆதரவை வேறு வழிகளில் ஆளும் அணி பெற்றுவிடும்.

அப்படியானால் இச்சிக்கலுக்குத் தீர்வுதான் என்ன?

இலங்கை அரசினர், ஏதோ "13ஆவது சட்டத் திருத்தம்'' என்கிறார்களே, அது என்ன? என்பதுபற்றி முதலில் தமிழீழத் தமிழர்களும், தமிழீழ ஆதரவு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிந்திக்கவேண்டும்; புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தமிழீழத் தமிழர்க்கு உரிய சமத்துவ உரிமை வராது என்று தெரிந்த நிலையில், அய்க்கிய நாடுகள் அவைக்கும், உலக மானிட உரிமைக்காப்பு அமைப்புக்கும், உலக நீதிமன்றத்துக்கும் இச்சிக்கலை எடுத்துச் செல்லவேண்டும்.

தமிழீழ விடுதலையை விரும்பும் தமிழ்நாட்டுத் தமிழரும் இதே போன்று செயல்படமுன்வரவேண்டும், ஏன்?

1. இன்று உலக நாடுகளின் பார்வையில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரசமைப்புச்சட்டம் 1997இல் இயற்றப்பட்டது. அது 19 பகுதிகளைக் கொண்டது. அவற்றுள் 15 ஆவது பகுதி, "பிராந்தியங்ளுக்கு அல்லது மாகாணங்ளுக்கு அதிகாரங்களைப் பகிர்வு செய்வது அல்லது மாற்றித் தருவது'' (Devolution of Powers to Regions) என்ற தலைப்பைக் கொண்டதாகும்.

அச்சட்டம் ஒரு முன்வரைவே (a Draft) ஆகும். அது 27.03.1997இல் இலங்கை நீதி மற்றும் அரசமைப்புத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பெரிஸ் என்பவரால் இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப் பட்டது. அவர் 19 பகுதிகளுள் 1 முதல் 14 மற்றும் 16 முதல் 19 பகுதிகளை மட்டுமே வெளி யிட்டார். 15 ஆவது பகுதியை அவர் வெளியிடவில்லை. அது பற்றிய விவரம் பின்வருமாறு உள்ளது.

CONSTITUTION OF SRI LANKA

"Justice and Constitutional Affairs Minister Prof G.L Peris released 18 chapters of the Draft Consutitution of the Republic of Sri Lanka on March 27, 1997. Chapters released were Ch.I through XIV and XVI throuth XIX The Chapter XV THAT deals with "Devolution of Powers to Regions" was not included"

இலங்கை அரசமைப்புச் சட்ட வரைவு என்பதில், முகவுரை என்கிற பகுதிக்கு மேலே தலைப்பில் உள்ள அறிவிப்புச் செய்தி இது. இதுபற்றி அறிந்திட இலங்கை நாடாளுமன்றத்தின் தமிழ் இன உறுப்பினர்களும், இலங்கை வாழ் எல்லாத் தமிழர்களும்; தமிழகத் தமிழர்களும் முன்வரவேண்டும். இலங்கை அரசிடம் தமிழ் மாகாணங்களுக்குச் சுதந்தரம் கோருவது, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே.

தமிழ் மாகாணங்களில் உள்ள ஏனைய தமிழர்கள் விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்திட இலங்கை அரசுக்குக் கையாள்களாக இருந்தும், இலங்கை அரசு இப்போது கிழக்கு மாகாணத்தில் இயங்கும் மாகாண அரசை அமைக்க வழி விட்டதைப் பெரிய தீர்வாகவும் ஏற்றுச் செயல்படுகின்றனர். "அரசியல் தீர்வுபற்றிப் பேசுங்கள்; போரை நிறுத்துங்கள்'' என்கிற தமிழகத் தமிழரும் இதுபற்றிக் கவலைப்படவேண்டும்.

மேற்படி வரைவுச் சட்டத்தில் பகுதி I, விதி 1 என்பது :

"சிறீலங்கா ஒரு தன்னாதிபத்தியக் குடிஅரசாகும்; இது இலங்கைத் தன்னாட்சிக் குடிஅரசு என வழங்கப்படும். இலங்கைக் குடிஅரசு பிரிக்கப்படமுடியாத மாகாணங்களின் ஒன்றியமாகும்'' என்றும்;

விதி 2 (2) என்பது :

"எந்த ஒரு மாகாண ஆட்சியோ அல்லது பல மாகாணங் களின் ஆட்சிகளோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கீழேகண்ட எந்த ஒன்றுபற்றியும் முன்மொழியவோ முயற்சி எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது''

(அ) "மாகாணங்களின் ஒன்றியமாக அமைந்துள்ள இலங்கைக் குடியரசிலிருந்து எந்த ஒரு மாகாணமோ அல்லது மாகாணங்களோ பிரிந்துபோக அல்லது துண்டித்துக் கொள்ள முயற்சி செய்யக்கூடாது'' எனக் கூறுகின்றது.
பகுதி II விதி 7 (1) என்பது :

"இலங்கைக் குடிஅரசு பவுத்தத்துக்கு மிக முதன்மையான இடத்தை அளிப்பதுடன், புத்த சாசனத்தில் விதிக்கப்பட்டுள்ள நெறிகளைக் காப்பதும் வளர்த்தெடுப்பதும் இந்த அரசின் நீங்காக் கடமையாகும்...''

விதி - 12 (2) "இலங்கையிலுள்ள ஒருவர் இலங்கையை விட்டு வெளியேற உரிமை பெற்றவர் ஆவார்'' "Every persion shell be free to leave Sri Lanka" எனக் கூறுகிறது. இலங்கை பவுத்தர்களுக்கான ஒரு நாடே ஆகும்; எவர் வேண்டுமாVனலும் இலங்கையைவிட்டு வெளியேறலாம். இது இப்படி எழுதப்படுவதற்குமுன்னரே, 1981 - 1983இல் கொடுங்கோலன் செயவர்த்தனே மேற்கொண்ட "இலங்கையி லிருந்து தமிழரை ஓடவிடுங்கள்'' என்ற கோட்பாடு, இலங்கை அரசமைப்பிலேயே 1997இல் இடம்பெற்றுவிட்டது.

பகுதி IV விதி 27 என்பது :

"சிறீலங்கா அரசின் அலுவல் மொழிகளாக (Official languages) சிங்களமும், தமிழும் இலங்கும்'' என்றும்;

விதி 28 என்பது :

"சிறீலங்கா அரசின் தேசிய மொழிகளாக(National languages) சிங்கள மொழியும், தமிழும், ஆங்கிலமும் இலங்கும்'' என்றும் கூறுகின்றன. இலங்கையில் யாழ் பல்கலை உள்பட உயர்கல்வி மொழியாக ஆங்கிலமும்; தமிழன் வீட்டுத் திருமணப் பதிவு உள்பட சிங்களமும், தமிழனுக்கு வரும் அரசு மடல்கள் சிங்களத்திலும் உள்ளன என்பதை 2005 சூனில் அங்கு நாம் நேரில் பார்த்தோம். இன்றைய உண்மை நடப்பில், மொழி உரிமையில், இலங்கைத் தமிழர் இரண்டாந்தரக் குடிமக்களே ஆவர். எப்படி?

விதி 31 என்பது :

"அரசுப் பொது ஆவணங்கள் (Public records) தமிழில் வைத்துக் காக்கப்படும் பகுதிகளில் வாழும் எந்த ஒருவரும் விதி 30(1)இல் பத்திகள் அ, ஆ, இ, ஈ இவற்றில் கண்டுள்ளபடி, அவ் வுரிமைகளைக்கொண்டு, தான் கோரும் ஆவணத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் பெறலாம்'' எனக் கூறுகிறது. தமிழரின் பாரம்பரிய வாழ்விடப் பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றவும், அவர்கள் தம் தாய் மொழியான சிங்களத்தில் ஆவணம் பெறவும் - தமிழன் ஆங்கிலத்திலோ, சிங்களத்திலோ மட்டுமே ஆவணம் பெறவும் வழி செய்வது இவ்விதியாகும். இவற்றை நாம் மேற்கொண்டு விரித்தெழுத விரும்ப வில்லை. ஆனால் ஒன்று.

"மாகாணங்களுக்கு எந்த எந்த அதிகாரங்களை மாற்றித் தர இலங்கைக் குடியரசின் அரசமைப்புச்சட்ட வரைவில் திட்டமிடப்பட்டிருக்கிறது'' என்பதை தீய உள்நோக்கத்துடன் இலங்கைத் தமிழர் பார்வையிலிருந்தும், தமிழகத் தமிழர் பார்வையிலிருந்தும், இந்திய அரசு - மற்றும் உலக அரசுகளின் பார்வையி லிருந்தும் வேண்டுமென்றே மறைத்துவிட்ட கொடியவர்கள் சிங்களவர்கள் என்பதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும். 39 நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை உள்ளடக்கிய "Constitution of the World" என்ற, எம்.வி. பைலீ (M.V.Pylee) தொகுத்து, 2000இல் வெளியிட்ட அரசமைப்புச் சட்டத் தொகுப்பில், இவை உள்ளன.

"மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு எத்தன்மையது'' என்பதை உலகத்தின் பார்வையிலிருந்து அடியோடு மறைத்து விட்ட ஒரு நாடு இலங்கை மட்டுமே. கொடுமைக்கும், பாதிப்புக்கும், அழிப்புக்கும் உள்ளான ஈழத் தமிழர்கள் முதலில் இதை உணரவேண்டும்; இந்திய அரசுக்கும், உலக நாடுகளுக்கும் இதை நாம் உணர்த்த வேண்டும். இந்தக் கொடுங்கோல் சட்டத்தை வைத்துக்கொண்டு, உலக நாடுகள் அவையில், அண்மையில் தமிழிலேயே சொற்பொழி வாற்றி, தமிழரை அழிப்பதே அரசின் நோக்கம் என்பதை மறைத்துவிட்டு, வெற்றியோடு இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே திரும்பினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 2008 - 2009 ஆண்டுக் கான வரவு - செலவுத் திட்டத்தை முன்மொழிந்து பேசிய அதிபர் இராசபக்சே இடையிடையே தமிழர் படும் அல்லலைக் குறிப்பிட்டுத் தமிழிலேயே பேசி நீலிக் கண்ணீர் வடித்தார்.

இந்திய மண்ணில் இருந்துகொண்டே, "இலங்கை அரசு போரை நிறுத்தாது'' என்று, 13.11.2008 அன்றே வெளிப் படையாக இராசபக்சே துணிவுடன் அறிவித்துவிட்டார்.
எனவே, இந்தியாவிலுள்ள தேசியக் கட்சிகளும், பல மாநிலக் கட்சிகளும் "இலங்கைத் தமிழர் படும் துயரைத் துடையுங்கள்; தமிழக மீனவர் படும் துன்பத்துக்குத் தீர்வு காணுங்கள்'' என்று மட்டுமே பேசுகின்றனர்.

"இலங்கைத் தமிழர் படும் துயரம்'' என்பது என்ன?

1. ஈழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் வழியே செல்லும் பு-9 என்கிற கண்டி - யாழ் தேசியச் சாலையை 3 ஆண்டுகளுக்குமுன் இலங்கை அரசு மூடியது. அதனால் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களுக்கும்; அரசு இராணுவத்திடம் உள்ள யாழ்ப்பாணத்துக்கும் உணவு மருந்து மற்றைய பொருள்கள் கிடைக்காமல் தமிழ் மக்களைப் பட்டினிக்கும் நோய்க்கும் ஆளாக்கியது.

2. மட்டக்களப்பு, திருக்கோணமலைப் பகுதிகளை - கருணா, பிள்ளையன் போன்ற சிங்களவர்களின் கையாள்களின் துணைகொண்டு கைப்பற்றி, அங்கு புலிகள் இயக்கத்தினர் செல்வாக்குப் பெற்ற பகுதிகளைத் தாக்கி, தமிழ் மக்களை வெளியேறச் செய்தது.

2. கிளிநொச்சியையும், முல்லைத் தீவையும் கைப்பற்றி, விடுதலைப் புலிகளை அடியோடு அழித்துத் தீரவேண்டும் என்பதற்காக - மணலாறு, முகமாலை, ஓமந்தை, வன்னி நகரம் மற்றும் கடலோரப் பகுதிகளில் காலாட் படையையும், கடற்படையையும் ஏவி விட்டு, அவர்கள் முன்னேறிச் செல்ல வழி வகுப்பதற்காக, வானூர்தி மூலம் தமிழ்ப் பொதுமக்கள் வாழும் ஊர்களின் பேரிலும், புலிகளின் மறைவிடங்களிலும் குண்டு மழை பொழிந்து, இன்றுவரை 3.5 இலக்கம் ஈழத் தமிழ் மக்கள் - பெண்டு பிள்ளை களுடன் காடுகளில் பசி, பட்டினி, நோயுடன் விலங்கு வாழ்வு நடத்திடவும் செய்தது.

இதற்கு ஒரே அடிப்படைக் காரணம் எது?

முப்படைகளைக் கொண்டு இலங்கை அரசு புலிகளின் ஆதிக்கத்திலுள்ள பகுதிகளைத் தாக்குவதுதான். அந்தத் தாக்குதல் நேற்றும் இன்றும் தொடர்ந்து நடைபெற்றிட எல்லாம் செய்வது யார்? நம் வாக்கைப் பெற்று, நம் வரிப்பணத்தை வைத்து இந்தியாவை அடக்கி ஆளும் இந்திய அரசுதான் என்பது கல்லுப்போன்ற உண்மையாகும். இந்திய அரசு இலங்கைக்கு உதவாவிட்டால், பாக்கிஸ் தானும், சீனாவும், அமெரிக்காவும் எல்லா உதவிகளையும் செய்யும் என்பது கெட்டியான உண்மை.

இந்நிலையில் அரசியல் தீர்வு வர, இலங்கையிலுள்ள தமிழின அரசியல் தலைவர்களும், தமிழீழ விடுதலை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உலக மன்றங்களுக்கு "பயங்கரவாதத்தை ஒழித்தல்'' என்கிற பேரால் - தமிழின அழிப்பைச் செய்வது - இலங்கை அரசு மேற்கொண்டுள்ள முப்படைத் தாக்குதலின் ஒரே நோக்கம் என்பதை வலிமையாக உணர்த்தவேண்டும். இதற்கு அவர்கள் ஆயத்தமாக வேண்டும். தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதற்கு ஆயத்தமாக வேண்டும்.

காசுமீர் சிக்கலை 61 ஆண்டுகளாகத் தீர்க்க மனமில்லா மல் - துப்பில்லாமல் - அந் நாட்டை அடிமையாக வைத்திருக்கும் இந்திய அரசையும், - பார்ப்பன, இந்தி, மலையாளி உயர் அதிகார வர்க்கத்தினரின் மூளை இடும் ஆலோசனைகளைக் கட்டளை களாக ஏற்று, சொந்த மூளையின்றி நடக்கும் இந்திய அரசின் அமைச்சர்களையும்; தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் தூக்கிப் பிடிக்கும் நிலைப் பாட்டை அப்படியே நம்பும் மூடர்களாக உள்ள இந்திய அமைச்சர்களையும், இந்திய அரசையும் தமிழகத் தமிழரும், இலங்கைத் தமிழரும் இனியும் நம்புவது கொலை யாளி வீட்டில் அடைக்கலம் புகுவதற்கு ஒப்பானதே ஆகும்.

இவர்களை நாமும், இலங்கை வாழ் தமிழர்களும் நம்பினால் இன்னும் ஒரு தலைமுறைக் காலம் இனிமேலும் விடுதலைப் புலிகள் போராடவேண்டும். இந்நெடிய காலத்தில், விடுதலைப் புலிகளில் பலர் கொல்லப்படலாம். ஆனால் கொரில்லாப் போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை யாராலும் எப்போதும் அழிக்கமுடியாது; அது அழிக்கப்பட நாம் - தமிழ்நாட்டுத் தமிழர் கிஞ்சிற்றும் இடந்தரக் கூடாது. இது 2005இல் நாம் சுட்டிய ஒரு முடிவு. தமிழகத் தமிழர்களும், தமிழக முதல்வரும் இவ் வேண்டுகோளைக் கருத்தில்கொண்டு விரைந்து செயலாற்றிட வேண்டுகிறோம்.
வணக்கம், நன்றி.

1.12.2008 - வே. ஆனைமுத்து