எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

புதன், 26 ஆகஸ்ட், 2009

தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!

தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!

நன்றி: தமிழ்வின்


தமிழீழத்தின் பலபாகங்களிலும் உள்ள மனிதப் புதைகுழிகள் ((Amnesty International வெளியிட்ட செய்தி) அமெரிக்கா செய்மதிப் புகைப்படக்கருவிகள் சிக்கிக்கொண்டதனைத் தொடர்ந்து, இலங்கை அரசு விடுதலைப்பலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றைத் தாங்கள் முழுமையாகத் தேடிக்கண்டுபிடித்த பின்னரே மீள்குடியேற்றமும், வெளியுலக - உடகவியலாளர்களை உள்ளே அனுமதிப்பதும் எனக் கூறி காலம் கடத்துவதுடன், ஈழத் தமிழினத்தின் அழிப்பிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது.

ஈழத் தமிழினத்தைத் திடமிட்டு அழித்து அவர்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல் செய்யும் பாரிய செயல் திட்டத்தை திட்டமிட்டு இலங்கையின் பாசிச அரசு செயல்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே. அதற்காக, விடுதலைப் புலிக்கு எதிரான போர் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றும் தமிழின அழிப்பிற்கு மேல்முலாம் பூசி சர்வதேசத்தை ஏமாற்றித் தனது இனஅழிப்புக் கபடநாடகத்தை சிறப்பாக அரங்கேற்றியதன் மூலமம் ஒருலட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழினத்தைக்கொன்று குவித்துவிட்டு அதற்கு அர்த்தமற்ற காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்களை மின்சார முட்கம்பிகளுக்குள் முடக்கிச் சிறைவைத்துக்கொண்டு, அவர்களையும் நாளாந்தம் அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதனைத் தட்டிக் கேட்பார் யாரும் இல்லை. அப்படிக் கேட்கச் சென்ற சர்வதேச அரசியல் வாதிகளும் இலங்கை அரசின் அற்பசொற்ப சலுகைக், களியாட்டங்கள், விருந்துகளுக்கும் விலைபோய்விட்ட நிலையில் இன்று ஈழத் தமிழினம் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுக்கொண்டு வருவதை யார்தான் காப்பாற்றப் போகிறார்கள்.

அண்மையில் மொரட்டுவையில் இரண்டு சிங்கள இளைஞர்கள் பொலிஸ் காவலில் விளக்கத்திற்குள்ளாக்கப்பட்ட வேளையில் கொல்லப்பட்டதற்காக அந்த பொலிஸ் நிலையமே நிர்கூலமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும்? யுவதிகளும் விளக்கம் என்னும் காரணம் காட்டி அழைத்தச் செல்லப்பட்டு அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதும் பின்னர் அவர்கள் அடையாளம் தெரியாமல் கொலை செய்யப்படுவதுமாக இன்று ஈழத்தமிழினத்தின் அழிப்பு நடவடிக்கைகள் இலங்கையின் பாஸிச அரசினால் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அவற்றில் ஒருசிலவற்றை சர்வதேச சமூகத்தின் கண்களுக்குத் தருகின்றோம்......

செய்மதிப் படங்களின் கணிப்பின்படி 1346 மனிதப் பதைகுழிகள் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது. அவற்றுள் வகைதொகையின்றிப் புதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் உறவுகளுக்கு சர்வதேச சமூகம் சொல்லப்போகும் பதில் தான் என்ன?

புதிதாகக் கிடைத்த செய்மதிப் படங்களின் கணிப்பில் வன்னிப் பகுதியில் மொத்தம் 17 பாரிய தமிழின அழிப்புத் தாக்கதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த மாதம் 14ந்திகதி கொழும்பின் புறநகர்ப் பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 12 அப்பாவித் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டள்ளார்கள். அவர்களுக்கு இதுவரை என்ன நடந்தது என்றே தெரியாத நிலையில் உள்ளது.

மின்சார முட்கம்பிச் சிறை முகாம்களுக்குள் இருக்கும் தமிழ் இளைஞர்களையும். யுவதிகளையும், விடுதலைப்புலிகளின் அமைப்பின் காவற்துறை, அரசியல்பிரிவு என்றெல்லாம் தவறான குற்றச்சாட்டுக்களைக் கூறி நாளாந்தம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் அகதி முகாமிற்குத் திரும்பாத நிலையே இன்றுவரை தொடர்கின்றது. (இவ்வாறு அழைத்துச் செல்லப்படுபவர்களில் பெரும்பாலனவர்கள் இராணுவத்தினரதும், அவர்களின் எடுபிடிகளினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு உள்ளானவர்கள் என்பது இன்று வரை யாரும் அறியாத ஒன்றாகும்)

கொழும்பிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் தொழில் செய்துகொண்டிருக்கும் அப்பாவித் தமிழ் வாத்தகர்களிடம் நாளாந்தம் கப்பம் என்ற பெயரில் நடைபெறும் கொள்ளையில் பலர் தங்கள் முதலை இழந்தவண்ணம் இருக்கின்றனர். அப்படிக் கொடுக்காத, கொடுக்க முடியாத தமிழ் வர்த்தகர்கள் வெள்ளை வான் கும்பலினாலும், இராணுவத்தினரின் போலிக் குற்றச்சாட்டின் பெயரிலும் கைது செய்தும், கடத்தப்பட்டும் கப்பப் பணம் கிடைக்காதவிடத்து கொலை செய்யப்படுவது நாளாந்த நடைமுறை சம்பவங்களாகிவிட்டன.

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல வெளிநாடுகளில் தொழில் செய்துவிட்டு நாடு திரும்பும் தமிழர்கள் கட்டநாயக்கா விமானநிலையத்தில் கைதுசெய்து கடத்தப்படுவது நாளந்த செயற்பாடாகிவரும் இன்றைய நிலையில், இன்று அதனைச் சிறப்பாகச் செயற்படுத்தும் வகையில் அங்கேயே ஓர் புலனாய்வு விசாரணைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அங்கு கொண்டு செல்லப்படும் தமிழர்கள் யாரும் தங்கள் உடமைகளையும், பெருந்தொகைப் பணத்தையும் இழந்துதான் வெளியே வர முடிகின்றது. அப்படி வக்கற்ற வகையற்றவர்கள் ஒரேயடியாகக் காணாமல் போய்விடுவது இப்பொழுது சர்வசாதாரணமாகிவிட்டது.

இராணுவ நடவடிக்கைகளின்போது ஒவ்வொரு சதுர அடியாக படையினர் நகாந்துதான் போரினை முடிவுக்குக் கொண்டுவந்ததாகச் சொல்லிய இராணுவப் பேச்சாளர், தற்போது விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதங்களும் தளபாடங்களும் தாங்கள் கண்டெடுப்பதாகவும், அவை முற்றாகக் கண்டெடுக்கப்படுவதுடன், அங்கெல்லாம் கண்ணிவெடிகள் இருப்பதாகவும் அவற்றையெல்லாம் மீட்டெடுத்த பின்னர் தான் மீள் குடியேற்றம் என்றும் சாவதேசத்திற்குப் பாசாங்குகாட்டி நாட்களைக் கடத்தகின்றார்கள்.

(ஏனெனில் இறந்துபோன இலட்சக்கணக்கான மக்களின் சடலங்களைப் புதைகுழிகளினின்றும் மீட்டெடுத்து அவற்றை அழித்தொழிக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு) அவர்களுடைய இந்த நடவடிக்கையை அனைத்துலகமும், ஐ.நா. சபையம் தலையாட்டிப் பொம்மைகளாகிவிட்டது போன்ற நிலை இன்று உருவாகி இருப்பது சர்வதேசத் தமிழினத்தை பெரும் கவலைக்குள்ளாக்கி இருக்கின்றது.

கடந்த வாரம் மலையகத் தமிழ்ப் பெண்கள் இருவர் கொழும்பில் வேலைசெய்து கொண்டிருந்தவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது தற்போதைய மழை காரணமாக மின்சார முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் தொற்றுநோய் பற்றிக் கொள்வதன் மூலம் அவர்கள் பாரிய அழிவினை எதிர்நோக்கி உள்ளனர் என்றும், அவர்கள் கிறிமினல் குற்றவாளிகளை விட மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணியாளரும், சட்டத்தரணியுமான திருமதி நிமால்கா பெர்னான்டோ அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டள்ளார்.

ராஜபக்ச தமிழ் மக்களுக்கு அகதி வாழ்வை அப்படியே தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பாரே தவிர அவர்களுக்கு நல்ல தீர்வுத் திட்டததையோ அல்லது 13வது அரசியல் சட்டத்தையோ நடைமுறைப்படுத்தவே மாட்டார்.

இப்படியான அகதி வாழ்வில் தொடர்ந்து வைத்திருந்து அவர்களை முற்றுமுழுதாக அழிக்கும் நடவடிக்கையே மேற்கொள்வார் என்றும் அவர் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(அவர்கள் யாரும் இருக்க சொந்த நிலம் அற்ற அகதிகள் அல்ல. அவர்களின் சொந்த இடங்களுக்க அவர்களைத் திரும்பவும் செல்ல அனுமதித்தாலே போதும். அரசு அவர்களுக்கு எந்த அகதி நிவாரணமும் செய்யத் தேவையில்லை. அவர்கள் நாளாந்த சராசரி வாழ்க்கையை சிறப்பாக நடாத்திக்கொள்ள முடியும்.

அகதிமுகாமில் இருந்து வேறு முகாம்களுக்க அழைத்துச் செல்லப்படுவதாக நாளாந்தம் கொண்டு செல்லப்படும் மக்கள் எங்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள் என்ற தகவல் இதுவரை யாருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.

நாளாந்தம் அகதி முகமில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்து கொண்டு செல்லப்படும் தமிழர்கள் என்ன ஆனார்கள் என்ற பதிலும் இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது.

இராணுவத்தினரின் கைக்கூலிகளாகச் செயல்படும் ஒருசிலர் அகதிமுகாமில் இருக்கும் மக்களில் சிலரை வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பொய்சொல்லி அவர்களின் உடமைகளையும் பணத்தையும் அபகரித்துக்கொண்டு பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே போய்விடுவதம் அகதி முகாம்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாகிவிட்டது. இதில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது சர்வசாதாரணமாகிவிட்டது.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் 80 வீதம் நிறைவேறிவிட்டது. அதேவேளை விடுதலைப்புலிகளுடன் தொடர்பில்லாத அப்பாவித் தமிழ்மக்கள் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களை அரசு இன்னமும் ஏன் மீள்குடியேற்றம் செய்ய தாமதம் செய்கின்றது என எதிர்கட்சித் தலைவர் அரசின்மீது குற்றம் சாட்டியுள்ளார்.

போரின்போது அரசின் வேண்டுகோளை நம்பி சரணடைந்த அப்பாவி மக்களை அரசு ஏமாற்றிக்கொண்டே வருகின்றது. மூன்ற மாதங்களுக்குள் அவர்களின் இடங்களுக்குத் திருப்பி அனுப்புவதாகக் கூறிய அரசு இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை மிருகங்களை விட கேவலமாக நடத்துகின்றது என ஜே.வி.பி கட்சியின் தலைவர் சோமவன் அமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

யார் என்ன சொன்னாலும் அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களை உடனடியாக மீள் குடியேற்றம் செய்ய முடியாது என சரத் பொன்சேகா கடந்த வாரம் கண்டியில் தெரிவித்துள்ளார்.

( அதிகரித்து வந்த மக்கள் செல்வாக்குடன் முதலமைச்சாராகும் நிலையை நோக்கிய எல்லா முன்னுரிமைகளும் பறிக்கப்பட்டு தனக்கு சமூகம் முன்னுரிமை தருவதை ராஜபக்ச அன் பிறதேர்ஸ் இனால் சகிக்க முடியாமல் தான் பல்லுப் பிடுங்கிய பாம்பாக தன்னை நடத்துவது தெரியாது வாழும் இவரது அறிக்கையே இப்படியென்றால் மற்றவர்களின் செயற்பாடுகள் எப்படி என்று சர்வதேசம் எண்ணிப் பார்க்க வேண்டும்.)

கிழக்கு மாகாணத்தில் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களைக் காட்டித் தருவதாக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போவதும் நீரேரிகளில் பிணமாக மீட்கப்படுவதும் அன்றாடம் நிகழ்வாகிவிட்டது. (மட்டக்களப்பு, பியகம ஆகிய இடங்களிலுள்ள வாவிகளில் மீட்கப்பட்ட தமிழ் வாலிபர்களின் சடலங்கள், இப்படிக் கொலை செய்யப்படும் அப்பாவித் தமிழ் இளைஞர்களது தான்....)

இவை எல்லாவற்றையும் தாண்டி இலங்கை அரசின் தமிழினப் படுகொலையும், அரச பயங்கரவாதமும் மலேசியாவில் கைது செய்யப்பட்ட செல்வராஜா பத்மநாதன் அதனைத் தொடர்ந்து நோர்வேயிலும், அமெரிக்காவிலும் மற்றம் சாவதேசங்களிலும் தமிழர்களைக் கைதுசெய்து இழுத்துவருவோம், தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற சவால்விடும் இலங்கையின் ஜனாதிபதியும் அவரின் இராணுவ பேச்சாளரும். (கையாலாகாத்தனமாகச் செயற்பட்ட மலேசியாவைப்போல் சர்வதேசமும் இருந்துவிடும், அல்லது தங்களிடம் விலைபோகும் என இலங்கை பாஸிச அரசு நினைப்பதுதான் வேடிக்கை....)

போரும் முடிவுக்கு வந்து, விடுதலைப் புலிகளின் தலைவரையும் கொலைசெய்து, அந்த இயக்கத்தையே முற்றாக அழித்துவிட்டதாக வெற்றிவிழாக்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இலங்கையின் பாஸிச அரசு இன்னமும் புலியென்று மக்களை ஏமாற்றிக்கொண்டு கடன் சுமைகளை மக்கள் சுமப்பது தெரியாமல் இருக்கும் அப்பாவிக் கிராமத்து மக்களை ஏமாற்றக் கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றது.

தூங்கிக்கொண்டிருக்கும் அப்பாவிக் கிராமத்து மக்கள் எப்பொழுது தான் உண்மையை உணருவார்களோ தெரியாது. இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் ஒன்றரைக்கோடி ரூபாவிற்கு மேல் அந்நியநாட்டுக் கடன்தொகையைத் தலையில் சுமந்தபடிதான் பிறக்கின்றது என்னும் உண்மை நிலை எப்போது அப்பட்டமாக வெளிவரப்போகின்றதோ?

நன்றி: தமிழ்வின்

விடுதலைப் புலிகளின் தியாகம் வீண் போகாது

விடுதலைப் புலிகளின் தியாகம் வீண் போகாது: பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்




சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை "நமது நோக்கு" என்ற ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதும், ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது.

சிங்கள நரி ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு நேர்காணலின் போது 'ஜெயவர்த்தன உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியமே இருந்திருக்காது' என்று கூறியிருந்தார். இந்த யதார்த்தம் இன்றுவரை அப்படியே தொடர்வதையே காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையின் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய எந்த சிங்கள அரசியல்வாதியும் இந்த யதார்த்தத்திற்கு வெளியே வந்தது கிடையாது. வரப்போவதும் கிடையாது. இதுவே ஈழத் தமிழர்கள் தமது தாயகத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. மாற்றமே இல்லாத சிங்கள மேலாதிக்க மனப்பான்மையே தமிழர்களை மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கித் தள்ளும் என்பது மறுதலிக்க முடியாத யதார்த்தம்.

ஆயுதம் ஏந்திய ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பட்டியலிட்டு, விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த அமெரிக்கா கூட தற்போது ஈழத் தமிழர்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. மேற்குலகின் பல நாடுகளும் ஈழத் தமிழர்களுக்கான நிர்ப்பந்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான போர் என உலக நாடுகளுக்கு அறிவித்த இலங்கை அரசு, இறுதி யுத்தத்தின்போது தப்பிச் சரணடைந்த தமிழ் மக்களை நடாத்தும் விதம் மனிதாபிமானமுள்ள எந்தச் சமூகத்தினாலும் அங்கீகரிக்க முடியாத கொடுமையாகவே பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய நாசிப் படைகளும், ஜப்பானியப் படைகளும் தோற்றுப் போன பின்னர் அந்த மக்கள் வெற்றி கொண்டவர்களால் தண்டிக் கப்படவில்லை. மாறாக, அவர்களது மனங்களை வெல்லும் முகமான விரைந்த நிவாரணங்களும், அழிவுகளுக்கான பரிகாரங்களும் வெற்றி கொண்ட தரப்பினால் வழங்கப்பட்டு, அவர்களது அமைதி வாழ்வுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது.

இலங்கையின் நிலவரமோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொடிய ஆயுதங்கள் கொண்டு சிதைத்துக் கொன்றுவிட்டு, உயிரோடு புதைத்துவிட்டு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதை ஒட்டுக்குழுவினர்கள் கூட ரசித்து இருக்க மாட்டார்கள். ஒண்டுவதற்கும், புகலிடம் வழங்குவதற்கும் உறவுகள் இருக்கும் நிலையில், கண்ணி வெடிகளைக் காரணம் காட்டி, மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாம்களில் வைத்துக் கொடுமைப்படுத்துவதை சிங்களவரைத் தவிர எந்த மனித குலமும் ஏற்றுக் கொள்ளாது.

பிறந்த குழந்தை முதல், இறுதிக் காலத்தில் வாழும் பெரியவர்கள் வரை வவுனியா வதை முகாம்களின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ்வைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான யுவதிகளும், இளைஞர்களும் எதிர்காலம் தெரியாத இருட்டில் வாழ்கின்றனர்.

வவுனியா முகாம்களிலிருந்து நாளாந்தம் பலர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

இந்த அவல வாழ்க்கை தொடரும் நிலையில், இலங்கைத் தீவில் அமைதி என்பது எப்போதுமே சாத்தியம் இல்லை. சிறுபான்மைத் தமிழினத்தின் அவல வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து, அவர்கள் கெளரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வகை செய்யப்படாதவரை சிங்களத்தின் வெற்றி என்பது நீண்டு செல்லப் போவதில்லை.

சிங்களத்தின் இனவெறியும், மேலாதிக்க சிந்தனையும் இனிமேலும் மாற்றங் கொள்ளத் தவறினால், தமிழீழக் கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளும் விடுதலைப் புலிகளாகவே பிறப்பார்கள் என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்று சொல்வதால் மட்டும் நெருப்பு குளிர்ந்துவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார் தட்டுவதால் மட்டும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்து விட முடியாது.

'விடுதலைப் புலிகள்' என்பது எதிர்வினை. சிங்கள தேசத்துக் கொடூரங்களின் அறுவடை. சிங்கள அரச பயங்கரவாதத்தின் பிரசவம். தமிழீழ மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் பலங்கொண்டு எழுவதற்குரிய அத்தனை காரணங்களையும் சிங்கள தேசம் அப்படியே பாதுகாக்கவே விரும்புகின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதையுமே வழங்காமல், போரின் வெற்றி மூலம் அவர்களை அச்சுறுத்துவதால் மட்டும் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.

சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக் காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். தமிழீழ விடுதலையை வென்றெடுக்க அவதரித்த அக்கினிக் குஞ்சுகளாக அவர்களை நெஞ்சில் சுமக்கின்றார்கள்.

இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். முழத்திற்கு ஒரு இராணுவமும், வீதிக்கு ஒரு சோதனை முகாமும் எனப் படை விரிவாக்கம் மட்டுமே ஈழத் தமிழர்களைச் சிறை வைக்கப் போதுமானது அல்ல. இலங்கையில் வாழும் அத்தனை சிங்களவரும் தம் மனச் சிறைகளிலிருந்து வெளியே வரவேண்டும். தமிழர்களைச் சக மனிதர்களாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பக்குவம் வராதவரை இலங்கைத் தீவில் அமைதி என்பது வெறும் கனவாகவே முடியும்.



சிங்கள தேசத்தில் ஆயுதக் கிளர்ச்சியை அறிமுகப்படுத்திய ஜே.வி.பி.யினர் சிங்களவர்கள் என்பதால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டு, இன்று அரசியல் தலைவர்களாக வலம் வருகின்றார்கள். இந்த ஜே.வி.பி. கிளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் சிங்களவர்கள் என்பதால் மன்னிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டார்கள். காரணமற்ற ஆயுதக் கிளர்ச்சியை நடாத்தியவர்கள் சிங்களவர்கள் என்பதால் அவர்கள் என்றுமே வதை முகாமில் சிறை வைக்கப்படவில்லை. ஆனால், நியாயமான அத்தனை காரணங்களையும் கொண்டுள்ள தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் சிங்கள தேசத்திற்கு பயங்கரவாதமாகவும், தமிழர்கள் பயங்கரவாதிகளாகவும் தெரிகின்றார்கள். தமிழர்களின் அழிவும், இழப்பும் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அள்ளி வழங்குகின்றது.

சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும்.

நன்றி. ஈழநாடு பாரிசு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

ஈழம் அவசியம் – அவசரம்!

ஈழம் அவசியம் – அவசரம்!
கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.

‘30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்’ என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. ‘சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்’ என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள்.

‘ஐந்தாம் யுத்தம்’ கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள். இன்று ‘தமிழீழத்தில்’ தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை.

அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்….

1. ‘கூடாரங்களைப் பிரியுங்கள்!’
ஈழத் தமிழரின் இன்றைய பெயர், ‘கூடார மக்கள்’. ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண் டோவின் கணக்கின்படி, 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சும்மா ரோட்டில் கிடத்தாமல் கூடாரங்களில் இருக்கிறார்கள்; அவ்வளவுதான்! வாஷிங்டன் மனித உரிமைக் காப்பகம், ‘இவை தற்காலிகக் குடியிருப்புகள் அல்ல; சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்’ என்கிறது. தினமும் இங்கு மக்கள் செத்து விழுகிறார்கள்.

கழிவறை வசதியைக்கூடச் செய்து தர மறுத்துவிட்டது சிங்கள அரசு. ‘கக்கூஸ்கள் அமைக்கப்படாததை மக்கள் ஐ.நா. சபையிடம்தான் கேட்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார், மீள் குடியேற்றத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன். ‘பசியில் இறந்தாலும் ஐ.நா-வே பொறுப்பு’ என்று சொல்லிவிட்டார்கள். ‘இந்த இடத்தில் இருந்து எங்களை விட்டால் போதும். எங்களது வீடுகளுக்குப் போக அனுமதித்தால் போதும்’ என்று கெஞ்சுகிறார்கள் மக்கள்!

2. காணவில்லை… காணவில்லை!

ஒரு குழந்தை காணாமல் போனால் இங்கு விளம்பரங்கள், போலீஸ் விசாரிப்புகள், தனிப் படைகள் என எத்தனையோ முஸ்தீபுகள். ஆனால், அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன கடத்தல்கள். குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதால்தான் கடத்தல்கள் எளிதாக நடக்கின்றன.

இதில் பெண்களும் சிறுவர் களும்தான் அதிகம் காணாமல் போகிறார்கள். ஒரு முகாமில் 870 சிறுவர்கள் அநாதைகளாக இருக்கிறார் கள். அவர்களுக்கென யாருமே இல்லை. மருத்துவமனைக்கோ, பக்கத்து முகாமுக்கோ சம்பந்தப்பட்டவர்களை அனுப்பிப் பார்க்க அனுமதித்தால், உறவினர் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவாவது முடியும். அதற்கும் அனுமதி இல்லை. இப்படிக் காணாமல் போன சுமார் 20 ஆயிரம் மக்களின் கதி என்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்!

3. வெள்ளை அறிக்கை

நீண்ட கால மரணங்களும் இழப்புகளும் கொண்டது ஈழத்துப் போராட்டம். 1983 முதல் 2001 வரை இறந்த வர்கள் ஒரு லட்சம் பேர். யாழ்ப்பாணம் தொடங்கி முல்லைத் தீவு வரை மொத்தமாக நாசமாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துச் சொல்லியிருக்கிறது. வட கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 34 ஆயிரம் வீடுகள் சேத மானதாகவும் சொல்கிறது அடுத்த புள்ளிவிவரம். இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அழிவுகள்தான் உச்சபட்சம். தமிழர் வாழும் கிராமங்கள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்ட நிலை. இப்படி தமிழர் பகுதிகள் அத்தனையும் கணக்கிட்டால் பாழடைந்த வீடுகள் எத்தனையோ?
முதல்கட்டமாக… பாதிக்கப்பட்ட வீடுகள், தொழில்கள், நிலங்கள் குறித்த தகவல்களுடன் இறந்தவர், இருப்பவர், இதில் உடல் ஊனமானவர் விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளிவந்தாக வேண்டும்!

4. பொதுமன்னிப்பு

“படுகொலைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, மற்ற போராளிகளையும் அவர்களது குடும்பத் தினரையும் மன்னிக்க வேண்டும்!” – இப்படிச் சொல்லி இருப்பவர் புலிகளின் பரம்பரை எதிரியான டக்ளஸ் தேவானந்தா. இன்று அமைச்சராக இருப்பவர். இப்படி சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

“வவுனியா, முல்லைத் தீவுப் பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் புலிகள் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். அவர்களை விசாரணை செய்வோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்தார். இதன்படி 3,000 பெண்கள் உட்படப் பலரிடமும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை வேறு வேலைகள் பக்கமாகத் திருப்பிவிட வேண்டும்; சித்ரவதைகள் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்கின்றன மனித உரிமை அமைப்புகள்!

5. ஏதாவது ஒரு நிவாரணம்

போர், மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல; அவர்களது அன்றாட வாழ்க்கை, இதுவரை சேர்த்துவைத்த சொத்துகள், பணம் அத்தனையையும் கொள்ளைகொண்டுவிட்டது. விவசாயம் பார்த்தவர்களுக்கு நிலம் இல்லை. மீன்பிடித் தொழில் செய்து பிழைத்தவருக்குப் படகும் வலையும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் 560 மீன்பிடிக் கிராமங்கள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரத்தின்படி, 2.70 லட்சம் மீனவர்கள் இருந்தார்கள்.

ஆனால், அது படிப்படியாகக் குறைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் ஆனார்கள். இதற்கு முக்கியமான காரணம், அவர்களது மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிக் கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய். மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், இம்மக்கள் வறுமைக்கோட்டுக்குத் கீழே தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன தென்னை, பனை மரங்கள் மொத்தமாகக் கொளுத்தப்பட்டன. தாங்கள் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடாகவோ, அல்லது தங்கள் குடும்பத்தில் இழந்த உறவுகளுக்கான கருணைத் தொகையாகவோஅந்தப் பணம் அமைய வேண்டும்!

6. பயமற்ற சூழ்நிலை

‘இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை’, ‘பயங்கரவாதிகள் வேறு பல இடங்களில் பதுங்கி இருக்கிறார்கள்’ என்று சொல்லி மக்கள் வாழ்ந்த இடங்களில் ராணு வத்தின் முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அதி உயர் பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பள்ளிக்கூடங்கள், கோயில்கள், முக்கியத் தெருக்களில் ராணுவத்தினர் தங்கியுள்ளனர். முன்பு மக்கள் இருந்த பெரிய வீடுகளில் இன்று ராணுவத்தினர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளில் ராணு வத்தினர் தங்கியுள்ளனர். வட கிழக்கில் 156 பள்ளிக்கூடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். முக்கிய மான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆள் நடமாட் டம் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. செக் போஸ்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, மக்க ளுக்குப் பயமற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு முன் வர வேண்டும்!

7. யாழ்ப்பாணம்

ராணுவத்திடம் சுமார் 15 ஆண்டு களாக இருக்கும் யாழ்ப்பாணம், ‘எமர்ஜென்ஸி’ பகுதியாகவே இன்னமும் உள்ளது. மாலை 6 முதல் காலை 6 வரை யாரும் ரோட்டில் நடமாட முடியாது. எங்காவது வேலைக்குப் போகும் ஆட்களும் 6 மணிக்குள்ளாக வீட் டுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இத்தனை ஆண்டு அடக்குமுறை உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. மேலும், அங்கு பொருளாதாரத் தடைகளும் விலக்கப்படவில்லை. பொருட்களின் விலை பல மடங்கு அதிகம். அனைத்து வகையான நெருக்கடிகளில் இருந்தும் யாழ்ப் பாணத்தை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும்!

8. கொழும்பு

எப்போதும் கொந்தளிப்பில் இருப்பவர்கள் கொழும்புத் தமிழர்கள். இங்கு தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் இல்லை. பதிலாக, சிங்களத் தீவிரவாத அமைப்புகளான ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உறுமய, ஜாதிகல உறுமய போன்ற குழுக்கள் எதையாவது சொல்லி தமிழர் கடைகள், வீடுகள், தொழிற்சாலைகளை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் பதுங்கிக்கொள்கிறார்கள். பூட்டி இருக்கும் வீடுகள் அடித்துத் திறக்கப்பட்டு நொறுக்கப்படுகின்றன. உயிருக்கும் உடைமைக் கும் கொழும்பில் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியமானது!

9. அச்சுறுத்தும் ஆயுதங்கள்

புலிகள் அமைப்பு முழுமையாக அடக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆயுதம் தாங்கிய பல குழுவினர் இலங்கை முழுவதும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள். ஈ.என்.டி.எல்.எஃப்., டக்ளஸின் ஈ.பி.டி.பி., சித்தார்த்தன் தலைமையிலான பிளாட், கருணா குரூப் எனப் பலரும் ஆயுதம் தாங்கி அலைகி றார்கள். மர்மமான முறையில் துப்பாக்கிச் சூடுகள் நடப்பதும், திடீர்க் கொலைகள் நடப்பதற்கும் பின்னணியாக இவர்கள் இருப்பதாகவும் ஆட்கடத்தல், கொள்ளை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!

10.உண்மையை உணர்ந்த மனிதர்கள்

இரும்புக் கோட்டையாக மாறிவிட்டது இலங்கை. என்ன நடந்தது, எத்தனை பேர் செத்தார்கள், இருப் பவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன தேவை என எதையும் நேர டியாகப் பார்க்க யாரையும் அனும திக்காத நிலையைத் தளர்த்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், பெண்கள் அமைப்புகள் என அங்கீகரிக் கப்பட்ட ஆர்வலர்களை உள்ளே அனுப்பி, மக்களைச் சந்திக்கவைத் தால் மட்டுமே அங்கு உள்ளவர் களுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறக்கும்.
“20 நாடுகளின் உதவியுடன் இந்த வெற்றியை நாங்கள் பெற்றோம்” என்று வெளி விவகாரத் துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சொல்லி இருக்கிறார். அப்படியானால், போருக்குப் பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் இந்த 20 நாடுகளுக்கும் உண்டுதானே! அதில் இந்தியாவும் ஒன்று.
நன்றி: விகடன்